Translate

Showing posts with label Kavithai. Show all posts
Showing posts with label Kavithai. Show all posts

Sunday 14 April 2013

வேண்டும்


வலி இல்லாத வாழ்க்கை வேண்டும்...!

பிரிவு இல்லாத உறவு வேண்டும்...!

ஆறுதலாய் அணைத்திட அன்பான கரங்கள் வேண்டும்...!

காயமே பட்டிடாத இதயம் வேண்டும்...!

எந்நிலையிலும் கலங்கிடாத கண்கள் வேண்டும்...!

உன்னை என்றும் எண்ணிடாத எண்ணம் வேண்டும் ...!

Wednesday 10 April 2013

என்னை முற்றிலும் மாற்றியது நீ தான்..

என்னை முற்றிலும் மாற்றி விட்டாய் நீ .........!!!!!!!!!

அன்பை மட்டும் வெளிப்படித்தின என்னுள் ஏன்   உன் மீது அன்பான கோபத்தை வெளிப்படுத்த செய்தாய்  ???

பிரிவின் வலி தெரியாமல் இருந்த என்னுள் ஏன்   பிரிவின் வலியை உணர்த்தினாய்  ???

யாரையும் தேடாமல் இருந்த என் கண்களை ஏன்   உன்னை மட்டும் தேட வைத்தாய்  ???

தனிமையின் அவஸ்தை தெரியாத எனக்கு ஏன்   தனிமையின் அவஸ்தையை பரிசாக தந்தாய்  ???

யாரிடமும் எதிர் பார்க்காத அன்பை ஏன் உன் மீது எதிர் பார்க்க வைத்தாய்  ???

இப்போது சொல் நானா மாறி விட்டேன்  ...???

நீயே சொந்தக்காரன்



என் கவிதையில் எழுதப்படும் வார்த்தைக்கு சொந்தகாரியாய் நானாக இருக்கலாம் ஆனால் தோன்றும் வார்த்தைகள் உன் நினைவாலே என்பதால் என் கவிதைக்கு நீயே சொந்தக்காரன் ஆவாய்....!!!!

உன் விருப்பமே என் விருப்பம்




நீ என்னை விரும்புகிறாய் என்று நானும் என் அன்பை உன்மேல் விருப்பமாய் மாற்றினேன் ஆனால் உன் விருப்பம் என்னவோ என்மீது இல்லை என்று தெரிந்தவுடன் உன் விருப்பத்துக்கு இணங்க என் விருப்பதை உடைத்தெறிந்து விட்டேன் ஏன்னெனில் உன் விருப்பம் எதுவோ அதே தான் எனது விருப்பமும் என்று உனக்கு தெரியாதா..?

ஒரு தலை காதல்

எண்ணத்தில் கலந்து கனவாய் தோன்றுகிறாய்..!
 எந்தன் இதயத்தின் ஆசைகளை அதிகமாக்குகிறாய்...!
 உன் பாதையை பின்தொடரும் உன் நிழல் ஆனேன்...!
 என்னை என்ன செய்தாய் உன்னையே நினைவில் நிலையாய் கொண்டுள்ளேன்...!
 உன் சிரிப்பில் சுட்டெரிக்கிறாய் எனவோ நானும் இதமாய் வெந்துபோகிறேன்...!
 என் கண்களின் செல்ல பிள்ளை நீதானோ உன்னை மட்டும் தான் பார்க்க துடிக்கின்றது...!
 என் இதயத்துள் நுழைந்த உனக்கு ஏன் என் அருகில் வர தெரியவில்லை...!
 என் வாழ்வின் துணை என்றும் நீதான்...!

Monday 1 April 2013

அன்பின் கண்ணீர்




அடிக்காமல் எப்படி உன்னால் மட்டும் 
 என்னை அழ வைக்க  முடிகிறது  ??  
அதிகமாய் என்னை அழ வைத்து  
அதிகமான அன்பை பெற்றுவிடுகிராயே...!
உனக்காக மட்டுமே கலங்கும்  என் கண்கள்  
என் பேச்சை கேக்காமல் உன் வார்த்தையை  
தான் நம்பி கலங்குகிறது...!
உன்னையே தேடி அலைந்த  
என் கண்களுக்கு தான்  தெரியும்  
காத்திருந்த வலி என்னவென்று...!
 உன் கண்கள் கலங்குவதை காண  
என் கண்களுக்கு பிடிக்கவில்லை 
அதனால் தானோ உப்பு கண்ணீரை விடாமல்  
ரத்த கண்ணீரை வடிக்கின்றது…..!!!

Sunday 24 March 2013

வேண்டும்

தீராத காதல் வேண்டும்
கேக்காத அன்பு வேண்டும்
பழகாத நட்பு வேண்டும்
பழகிய பண்பு வேண்டும்
சிரிக்காத கஷ்டம் வேண்டும்
அழாத பிரிவு வேண்டும் ..
நிலைகள் தடுமாறினாலும்
நெஞ்சில் நீ வேண்டும் ♥

Sunday 8 July 2012

நண்பன்/தோழி

வானமும் பூமியும் இறைவணின் சொத்து,
இன்பமும் துன்பமும் மனிதரின் சொத்து,
நீயும் நானும் கடவுளின் படைப்பு,
என்றும் பிரிய கூடாது "நம் நட்பு'

"
கண்ணில் ஒரு மின்னல்"
"
முகத்தில் ஒரு சிரிப்பு"
"
சிரிப்பில் ஒரு பாசம்"
"
பாசத்தில் ஒரு நேசம்"
"
நேசத்தில் ஒரு இதயம்"
அந்த "இதயத்தில் என் நண்பன்/தோழி நீ"

நட்பு


நாட்கள் கூடக்கூட
நம் நட்பு வட்டம் கூடுது
தினங்கள் செல்லச் செல்ல
நம் நட்பு மென்மேலும் வலருது
வருடங்கள் சேரசேர
நம் நட்பு இன்னுமின்னும் பலமாகுது
உலகையே நாம் நட்பால் வளைப்போம்
உலகெங்கும் நட்புப்பூ பூக்கட்டும்..!!

ஒரு காத்திருப்பு

ஒரு காத்திருப்பின்
இடைவேளையில்
நட்பில் கரைந்த
ஞாபகங்கள்!!

தனக்கு வேண்டியதை
`தா`என்று கேட்கவும்
கேட்காமலே
எடுத்துக் கொள்ளவுமான
உரிமைப் பத்திரம்!
மௌனத்தின் பாஷை
இத்தனை
தெளிவாய் இருக்குமா
உயிரில் கேட்கிறதே!!

Saturday 7 July 2012

தோழி,

தோழியென நினைத்தவளே,
தோலில் முள் ளெடுத்து கீறி விட்டாள்..!
அன்று
கிளம்பாதே யென்று சொன்னவளே..
வழி காட்டி கிளம்பு யென்றாள்..!

எனக்காக என்நண்பன் !


எனக்காக என்நண்பன்

சோகங்கள் என்னை மிதிக்கும்போது
என்னுள் தனிமை பிறக்கிறது
அப்போதுதான் இனிமையாக
என் உயிரினும் மேலான நட்பு பிறந்தது !

என்கண்கள் ஈரமாகும்போதுல்லாம்
உனது கரங்கள் என்னை தாங்குது!
வாழ்க்கையில் வழுக்கி விழும்போதெல்லாம்
என்னை இழுத்துபிடித்த நண்பனே ...
நீ என்கண்களின் பார்வையாக இருக்கிறாய் !

என்துன்பத்துள்
உன்இன்பத்தை கலந்தாய்
என்னை கேட்கலாமேலேயே
உன்உயிரில் என்னைசேர்த்து கொண்டாய்!

நான் காயங்கள் கண்டபோதும்
என்வலியை உன்விழியில் பார்த்தேன்
நான் இன்பங்கள் பெற்றபோதும்
என்சந்தோசத்தை உன்ஆனந்தகண்ணீரில்
கண்டேன்