Translate

Sunday 20 July 2014

கல்லூரி தாய்


நான்கு வருடம் நம்மை சுமந்த இந்த கல்லூரி தாய்க்கும் நமக்கும் இடையே உள்ள தொப்புள் கொடி இன்று அறுந்தது...!

நம்மை சிறந்த மனிதர்களாக வலிமை மிக்கவர்களாக வெளி வாழ்வுக்கு ஏற்ப பாடம் கற்றுக்கொடுத்து இப்போது நம்மை ஈன்றெடுத்த இந்த நொடியில் அழுகையுடன் அவளை விட்டு வெளியேறுகிறோம்...!

எனது உலகமாய் நான் எண்ணிய இந்த கல்லூரியை என் மரணத்திலும் மறக்க முடியாது
சிறந்த நண்பர்கள்,உறவை போன்ற உயிர்கள், குடும்பத்தை போல பாசம் என அனைத்தும் நிறைந்து இருக்கிறது இந்த கல்லூரியில்...!

நாம் கற்றது படிப்பு பாடம் மட்டும் அல்ல வாழ்க்கை பாடமும் தான்...!

வேண்டாம் வேண்டாம் என்று ஆயிரம் முறை சொன்னாலும் இந்த கல்லுரி வாழ்க்கையோ இப்போது முடிவிற்கு வந்து விட்டது...!

இந்த கல்லூரியை விட்டு விடை பெற்றாலும் என் குடும்பமாகிய நண்பர்களிடம் இருந்து என் மரணம் அப்போது தான் நான் விடை பெறுவேன்....!!!!

No comments:

Post a Comment